Ads Area

சம்மாந்துறை பிரதேசத்தில் அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவது தொடர்பில் ஆலோசனை.

 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (24) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதன்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றை நிறுவுதல், கல்முனை பஸ் டிப்போ உடன் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் நிறுவுதல் போன்ற விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டு கலந்துரையாடப்பட்டிருந்தது.

 

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், ஜமாலியா பாடசாலை மாற்று காணி விடயம், மாவடிப்பள்ளி யில் உடனடியாக பாலம் அமைப்பது சம்பந்தமான தீர்மானம், விவசாய காணி சம்பந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன  பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா வின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்  அஷ்ரப் தாஹிர், ஏ.எம்.மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடீஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், பிரதம கணக்காளர், ஏ.எல் மஹ்ரூப், உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe