பாறுக் ஷிஹான்.
ஐஸ் போதைப்பொருளுடன் மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புறநகர்ப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதன்கிழமை (19) இரவு நடமாடிய 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் 2 மில்லி 450 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதன் போது நீண்ட காலமாக குறித்த சந்தேக நபர் இப்பகுதியில் இப்போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதுடன், அப்போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் அவுலியா வீதி, நிந்தவூர் 23 பிரிவினைச் சேர்ந்தவர் என்பதுடன், கைதான நிலையில் சான்றுப் பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.