சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சுகாதார பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்ய https://forms.gle/B2nYXxunaDigzREU9 கிளிக் செய்யவும்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் வழிகாட்டுதலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியத்தில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச உணவகங்கள் உட்பட டேஸ்ட் கிழங்கு பொரியல் கடைகள் மற்றும் பகல், இரவு வேளையில் திறக்கப்படும் உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப்பேணி உணவுகளைத் தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாதிருத்தலும், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் போன்ற பல முறைப்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்டது.
அத்துடன், முறைப்பாடுகளை QR முறை தெரியப்படுத்தும் நிகழ்வு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்று ஏழு வேலை நாட்களுக்குள் விசாரணைகள் துரிதமாக நடாத்தப்படும்.
இந்நிகழ்வில்,சமூக வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம். ஹில்மி,மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.