Ads Area

ஜனவரி 01 ஆம் தேதி முதல் இன்று வரை நாடு முழுவதும் மொத்தம் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் இன்று வரை நாடு முழுவதும் மொத்தம் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்துச் தெரிவித்த எஸ்.எஸ்.பி மனதுங்க, 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் திட்டமிடப்பட்டவை என்று கூறினார்.


துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


"துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 27 கைத்துப்பாக்கிகள் மற்றும் 14 டி-56 ஆயுதங்கள் உட்பட 41 துப்பாக்கிகளையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இந்த சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸ் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe