மௌபிம ஜனதா கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் மிலன் ஜெயதிலக்க, இன்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தலைமை நீதவானால் ரூ. 1 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு பிரதேச சபை எல்லைக்குள் நிலம் ஒன்றை விற்பனை செய்யும் போது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 373,000 இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.