Ads Area

குவைத்தில் அமீரை (மன்னரை) விமர்சித்த மாணவிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

குவைத்தின் பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி (குவைத் நாட்டவர்) ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இவர் சமூக ஊடக தளமான X யில் போலி கணக்கைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் அமீரை அவமதித்ததாகவும், ஆட்சியை கவிழ்க்கத் தூண்டியதாகவும் மாணவி மீது குற்றம் சாட்டப்பட்டது.


விசாரணையின் போது, ​மாணவி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, தனது கணக்கை குவைத்துக்கு வெளியே வசிக்கும் ஒரு வெளிநாட்டவர் ஹேக் செய்ததாக கூறினார். இந்த நபர் தன்னை மிரட்டியதாகவும், தனது பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட்கள் மற்றும் கட்டுரைகளை நீக்க வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த மாணவியின் X கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்பதை சைபர் க்ரைம் பிரிவு கண்டறிந்ததையடுத்து அவர் வாதம் அனைத்தும் பொய் என்பது உறுதியானது.


வளைகுடாவை பொறுத்த வரையில் நாட்டின் மன்னர்களையும், தாய் நாட்டுக்கு எதிரான போராட்டம் மற்றும் புனித குரான் உள்ளிட்ட அரபு மக்கள் புனிதமாக கருதும் இவைகளை விமர்சனம் செய்வது மன்னிக்க முடியாத குற்றங்களாக கருதப்படுகிறது. சவுதியில் தற்போது வரையில் நாட்டுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe