தனது வகுப்பில் உள்ள நான்கு பெண் மாணவிகளின் புகைப் படங்களை திருடி அதனை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக சித்தரித்து பாடசாலை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிர்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்கள் ஜூன் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்து, சந்தேக நபர்களை சிறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் சிறார் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமிகளில் ஒருவரின் தந்தை AI மூலமாக தவறாக மாற்றப்பட்ட தனது மகளின் படங்களைப் பார்த்து பொலிஸில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் இரண்டு மாணவர்களும் காவலில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இக் குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் எதிர்வரும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.