அறிவித்தல்.
கிழக்கிலங்கையில் மட்டு அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரலாறும் தொன்மை கொண்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வானது எதிர் வரும் புதன்கிழமை (2025/06/04 ) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி (2025/06/05) அன்று அம்மனுக்கு பூசையும், 2025/06/06- 2025/06/08 ஆம் திகதி வரை விஷேட பூசைகளும், அம்மன் கிராம வீதி உலா வரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மேலும் நிகழ்வின் தொடராக 2025/06/09 அன்று காலையில் பாற்குடபவனியும் மாலை கல்யாணக்கால் வெட்டுதலும் இடம்பெற்று, 2025/06/10 அதிகாலை அம்மன் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற்று, மடிப்பிச்சை எடுத்து வந்து மாலை வட்டுக்குத்து பூசை இடம்பெறும்.
மறுநாள் 2025/06/11 அதிகாலை திருக்குளிர்த்தி சடங்கும் இடம்பெற்று நிறைவு பெறுபெறுவதுடன், 2025/06/18 ஆம் திகதி எட்டாம் நாள் சடங்கும் இடம்பெறும்.
(பிரதம பூசகர் சிவத்திரு அரசரெட்ணம் முரளிதரன் ஐயா)
அனைவரும் வருக அன்னை அருள் பெறுக.....!!!!
செய்திகள்
க.டினேஸ்.