Ads Area

சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்.

அறிவித்தல்.


கிழக்கிலங்கையில் மட்டு அம்பாறை வீரமுனை  கிராமத்தில் வரலாறும் தொன்மை கொண்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய  வருடாந்த திருச்சடங்கு உற்சவம் நடைபெறவுள்ளது.


இந் நிகழ்வானது எதிர் வரும் புதன்கிழமை (2025/06/04 )   இரவு திருக்கதவு திறத்தலுடன்  ஆரம்பமாகி (2025/06/05) அன்று அம்மனுக்கு  பூசையும், 2025/06/06- 2025/06/08 ஆம் திகதி வரை விஷேட பூசைகளும், அம்மன் கிராம வீதி உலா வரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.


மேலும் நிகழ்வின் தொடராக 2025/06/09 அன்று காலையில் பாற்குடபவனியும் மாலை கல்யாணக்கால் வெட்டுதலும் இடம்பெற்று, 2025/06/10  அதிகாலை அம்மன் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற்று,  மடிப்பிச்சை எடுத்து வந்து மாலை வட்டுக்குத்து பூசை இடம்பெறும்.

  

மறுநாள் 2025/06/11 அதிகாலை திருக்குளிர்த்தி சடங்கும் இடம்பெற்று  நிறைவு பெறுபெறுவதுடன், 2025/06/18 ஆம் திகதி எட்டாம் நாள் சடங்கும் இடம்பெறும்.


(பிரதம பூசகர் சிவத்திரு அரசரெட்ணம் முரளிதரன் ஐயா)


அனைவரும் வருக அன்னை அருள் பெறுக.....!!!!


செய்திகள்

க.டினேஸ்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe