Ads Area

ஓட்டமாவடி- தியாவட்டுவான் வாகன விபத்தில் 12 பேர் காயம்.

 எஸ்.எம்.எம்.முர்ஷித்.


ஓட்டமாவடி தியாவட்டுவான் பகுதியில் இன்று காலை (10.06.2025) இடம் பெற்ற வாகன விபத்தில் பணிரெண்டு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.


வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச்சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையம் சென்று திரும்பி ஊருக்கு வரும் வழியிலயே இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள மதகில் மோதுண்டதிலயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்தினால் வேனில் நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்ளடங்களாக பயணித்த  பணிரெண்டு பேரும் காயமடைந்துள்ளதுடன் அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இந்த விபத்துக்காரணமாக தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் பிரதான நீர் குழாயில் சேதமேற்பட்டுள்ளதாக அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.


இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe