அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரி.எல். அப்துல் மனாப் அவர்கள் முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் ஆவணங்களைக் கையளித்து, மாநகர மேயர் பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதையடுத்து அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய உறுப்பினர்கள், மாநகர மேயர் அதாஉல்லா அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.