Ads Area

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடவடிக்கை.

தகவல் - MOH Sammanthurai.


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்டது.


​இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

⚠️ இச்சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.


⚖️ சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


​🔴 பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்:


தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால், குளிரூட்டிகளில் (Fridge/Freezer) வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை  கொள்வனவு செய்யும்போது  அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 


​சுகாதாரமான உணவே ஆரோக்கியமான வாழ்வு! 🌱






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe