பைஷல் இஸ்மாயில் -
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ கிளை இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச வைத்திய முகாமும், வைத்தியப் பிரிசோதனையும் சனிக்கிழமை (01) அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ கிளையின் உதவிச் செயலாளர் யூ.எல்.பசீல் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ தலைவர் எம்.ஐ.எம்.றியால் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் இலவச வைத்திய முகாமும், வைத்தியப் பிரிசோதனைகளும் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த முகத்தாடை மற்றும் வாய்ப்புற்று வைத்திய நிபுணர் வைத்தியர் பீ.அனுஷன் மதுஷங்க, கண் வைத்திய நிபுணர் வைத்தியர் வருண விஜயசிறிவர்த்தண, பொது வைத்திய நிபுணர் வைத்தியர் கே.அருல்மொழி, பற் சத்திரசிகிச்சை வைத்தியர்களான கே.முரளிதரன், கே.கிருசாந்திணி, கே.மேகநாதன், ரீ.கேதீசன், பீ.துஷிதா, எம்.வி.அப்துல் வாஜித், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.முனாஸ்தீன், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.இஸ்மாயில் உள்ளிட்ட வைத்தியர்கள் அடங்கிய குழாமினரும், உத்தியோகத்தர்களும் வருகை தந்து மக்களுக்கு முற்றிலும் இலவசமான வைத்திய சிகிச்சைகளையும், ஆலோசணைகளையும் வழங்கவுள்ளனர்.
இதில் வாய்ப்புற்று, முகத்தாடை, கண் பரிசோதனை, பொது வைத்திய பரிசோதனை, பல் வைத்தியப் பரிசோதனைகளான பல் பிடுங்குதல், பல் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், கிளிப் போடுதல் போன்ற சிகிச்சைகளுடன் தொற்றா நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், சீனி பரிசோதனை உள்ளிட்ட ஏனைய உடற் பரிசோதனைகளுடன், வைத்திய ஆலோசனை மற்றும் விழிப்புணர் நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.