அசைவ உணவுப் பிரியர்களில் பெரும்பாலானோர் ஆடு, கோழி அகியவற்றின் இறைச்சியை சதை, எலும்பு, ஈரல் என தனித்தனியாக ருசிப்போம்.
அதில் ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா?
லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு நச்சுத் தன்மையை மட்டப்படுத்துவதாகும். இறைச்சியைவிட ஈரலைச் சாப்பிடுவதை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவர். இதற்குக் காரணம் அதன் சுவையும் மென்மைத்தன்மையும் தான்.
ஈரலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன உறுப்பு இறைச்சிகளில் மிகவும் வலிமைமிக்கது ஈரல் தான். இதில் உயர்த்தர புரதம், வைட்டமின் எ, ஃபோலிக் அமிலம், கிரோமியம் பி 12 போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. ஈரல் உங்கள் இதயத்திற்கு வலு சேர்க்கிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
ஈரல் சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மைதான் ஆனால், வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் அங்கு ஆரோக்கியமாக சமைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமாகச் சமைத்து வாரத்துக்கு நான்கு நாட்கள் கூட சாப்பிடலாம்.
அதிக ஏ விட்டமின் காரணமாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெருகும். ஈரல் சாப்பிட்டால் விட்டமின் மாத்திரைகளை கூட தவிர்த்து விடலாம்.
ஆட்டினுடைய ஈரலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் அதைச் சாப்பிடும் போது, பூண்டை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலை மட்டுப்படுத்தும்.