நன்றி.
Dr mohamed mahir
இலங்கையில் மீண்டும் Panadol drops சந்தைக்கு வந்துள்ளது இங்கு நாம் இருவகையான தயாரிப்புகளை சந்தையில் காணலாம் ஒன்று Drops எனப்படுவது, மற்றையது Syrup.
இந்த இரண்டு தயாரிப்புகளிலும் அடிப்படையில் உள்ள கெமிக்கலானது பரசிற்றமோல் ஆகும் ஆனால் அதன் மருந்து கொள்ளளவானது மிகவும் வேறுபட்டது. பொதுவாக இந்த Drop தயாரிப்பை எடுத்துக் கொள்வோமானால், இதில் paracetamol 100mg/ml (1ml ல் 100mg Paracetamol) ஆக அடங்கியுள்ளது. ஆனால் Syrup தயாரிப்பின் அளவு paracetamol 120mg/5ml (5ml ல் 120mg Paracitamol) ஆகும்.
சிறுவர்களுக்கு இந்த தயாரிப்பை கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் நடக்க வேண்டும். Paracetamol மருந்தானது உடல் நிறைக்கு ஏற்பவே கொடுக்கப்படல் வேண்டும். சாதாரணமாக ஒரு கிலோ கிராம் உடல் நிறைக்கு 15 மில்லி கிராம் பரசிடமோலே நியம அளவாகும். உதாரணமாக 6Kg எடையுள்ள ஒரு குழந்தையை எடுப்போமானால்: அவரது உடல் நிறைக்கேற்ப தேவையானது 90mg Paracetamol. இங்கு paracetamol Drop கொடுப்பதெனில் 0.9ml ஏ கொடுக்க வேண்டும். Paracetamol syrup கொடுப்பதாயின் 3.75ml கொடுக்க வேண்டும்.
நான் அதிகமான தாய்மார்கள் இந்த paracetamol Drop ஐ மாற்றி கொடுத்த சம்பவங்களை கண்டுள்ளேன். எமக்கு இந்த மருந்து ஒரு சாதாரணமானது போல் தோன்றினாலும், சிறுவர்களுக்கு இது விரைவாக ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
ஆகவே இந்த இரண்டு வகை தயாரிப்புகளையும் பாவிக்கும்போது சரியான அளவில் தீர்மானித்து கொடுப்போம்.
Panadol infant Drops என்ன காரணத்துக்காக?
நன்றி.
Dr Ziyad Aia.
Panadol infant Drops பொதுவாக 15ml கொள்ளளவுலேயே (Bottle) வருகிறது.
இது 3 மாதம் தொடக்கம் ஒரு வயது வரையான குழந்தைகளை இலக்காக கொண்டே Infant drops என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1ml drops இல் 100mg Paracetamol உள்ளது.
மேலே சொன்ன கணித்தல்படி 6kg நிறை கொண்ட குழந்தை ஒன்றுக்கு 15 × 6 = 90mg Paracetamol தேவை. அதாவது Drops இல் 0.9ml கொடுக்க வேண்டும்.
(அதாவது Pump இல் ஒரு முறை.)
இதுவே Syp/Liquid ஆக இருந்தால் (120mg/5ml) 3.75ml கிட்டத்தட்ட 4 pumps. பொதுவாக சிறு பிள்ளைகள் அதிக அளவு மருந்து கொடுக்கும் போது வாந்தி எடுக்க செய்வர். இதனை தடுப்பதற்கு மருந்தின் அளவை குறைக்க Drops அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு Drop என்பது 0.05ml.
எனவே 0.9ml கொடுக்க 18 drops தேவை. Drops கொடுக்கும் போது வாந்தி எடுக்கும் தன்மை குறைவு. நாக்கிலே Drops ஐ வைத்தால் அது உமிழ்நீருடன் கரைந்து செல்லும். அதனை வாந்தி எடுப்பது கடினம். Drops ஐ ஒரேயடியாக வழங்காமல் இடைவெளி விட்டு வழங்கினால் இலகுவாக வழங்கலாம்.
இப்படி இதன் நன்மை இருந்தாலும் இதனது மறுபக்கம் பெற்றோரின் அறியாமையினால் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்ட கீழைத்தேய நாடுகளில் இதனை அறிமுகப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
ஏற்கனவே Drops மற்றும் children Panadol என்பவை சந்தையில் இருந்து நீக்கப்பட்டாலும் Drops மீண்டும் வந்துள்ளது. இதுபற்றிய மீடியா அறிவிப்புகளையும் காணவில்லை.
2010 இல் Paracetamol Overdose பற்றி The Hindu https://www.thehindu.com/sci-tech/health/policy-and-issues/How-overdose-of-paracetamol-hits-kids/article16046095.ece?fbclid=IwAR0ZyyH0CsP2YWpEaq8GN9ccyL6mEZlJ_IqPLIp2eNj13d1HfbJU4pKsKxs வெளியிட்ட ஆய்வறிக்கையில் சிறு பிள்ளைகளுக்கான Paracetamol Overdose அதன்மூலம் ஏட்படும் ஈரல் பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தவறான முறையில் கொடுக்கப்படும் இந்த Drops.
பொதுவாக Paracetamol (Panadol) வைத்தியரின் மருந்துச் சீட்டு இன்றி Over The Counter மருந்துகளாக Pharmacy களில் விற்கப்படுவதால் இதன் ஆபத்துக்கள் அதிகம். பொதுவாக நகர்புறம் தவிர்ந்த பிரதேசங்களில் பயிற்றுவிக்கப்பட்ட pharmacist இல்லாமல் வெறும் பழக்கத்தில் மருந்து விற்பனை செய்யும் நிலையங்கள் பல உள்ளன.
இவர்கள் மூலமாகவே பொதுமக்களுக்கு மருந்துப் பாவனை முறைகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே முதலில் இவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை.
பின்வரும் Link ஊடாக National Regulatory Authority யை தொடர்பு கொண்டும் கருத்துகளை தெரிவிக்கலாம். http://nmra.gov.lk/index.php?option=com_contactmap&view=contactmap&id=1&Itemid=87&fbclid=IwAR2LIXbUuHR-0a9n_IV4f_7wwXlQM0wbxXEfxSOHutWttNuqsJQyE4-BwdU