Ads Area

சம்மாந்துறை கைகாட்டி பிரதேசத்தில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவின் வேலைத்திட்டம்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் சம்மாந்துறை புளக் ஜே மேற்கு -02 கைகாட்டி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்காவின் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வேலைத்திட்டத்தினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் பார்வையிட்டதுடன் தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபாவிடம் குறைபாடு்களையும், தேவைகளையும் கேட்டரிந்து கொண்டார்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.நஜீம், எஸ்.நளீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சபீக் இஸ்மாயில் அவர்களும் கலந்துகொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe