நாளை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின் ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் அமர முயற்சிகள் நடக்கலாம் காரணம், சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளும் கட்சியினர் ஆசனத்தை பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது இவ்வாறான ஆசனப் பிரச்சினையின் காரணமாக நாளைய தினம் நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலை ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாளைய தினம் ஆளும் கட்சி ஆனசங்களில் அமரப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார் அதே போல் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்கட்சியின் ஆசனங்கள் வெறுமையாக இருந்தன, நாம் அந்தப் பகுதியில் அமரப் போகிறோம் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.