Ads Area

மத்திய கிழக்கு வாழ் நண்பர்களே!! இப்படியெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

முகம்மட் ரிஷாட் - சம்மாந்துறை 
டோஹா கட்டாரிலிருந்து

மத்திய கிழக்கு உணவு பழக்க வழக்கமும் கேள்விக்குறியாகும் நம் ஆரோக்கியமும்.

தான் நாலு காசு சம்பாதிக்கனும் தன் குடும்பத்தை எந்த குறையுமியுல்லாமல் பார்த்துக்கனும் என்ற ஒரே நோக்கில் பல கனவுகளையும் லட்சியங்களையும் மனதில் சுமந்த வண்ணம் குடும்பம் மனைவி மக்களை விட்டு விமானமேறி வந்து சேர்கின்றோம்.

வேலைக்கு சேர்ந்தவுடன் கிழமையில் 6 நாட்கள், 08-10 மணிநேர வேலை, இன்னும் கொடுமை ஒரு சிலருக்கு 7 நாட்கள் 12 மணிநேர வேலை, இப்படி ஒரு பொறிமுறை வாழ்க்கைக்கு நம்மை நாம் இயந்திரமாக மாற்றிக் கொள்கின்றோம், இயந்திரத்துக்கு எரிபொருள் நிரப்புவதைப் போல் கிடைக்கும் சாப்பாட்டை சரியான ஒரு நேரம் ஒன்று இல்லாமல் சாப்பிடுகின்றோம்.

வேலையை முடித்து சமைப்பதற்கான நேரம் கிடைக்காதவிடத்து மற்றும் நேரமிருந்தும் நாட்டமின்மை காரணமாக, சாப்பாடு சமைத்து கொடுக்கும் மெஸ்ஸில் சாப்பிட ஆரம்பிக்கின்றோம், . வியாபார நோக்கில் செய்யப்படும் மெஸ்ஸில் என்ன.. நாம் விரும்பும் ஆரோக்கியமான சமயலாகவா இருக்க போகின்றது. விலை குறைந்த மரக்கறி, கொழுப்பு கூடிய இறைச்சி வகைகளையும் விலை குறைந்த எண்ணெய்களைக் (Refined Oil) கொண்டு சாப்பாடுகளை சமைக்கிறன்றனர் அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை காரணம் இங்கு இருக்கும் விலைவாசியும் ஒரு பக்கம்.

மேலும் லீவு நாட்களில் வெளியில் நண்பர்களுடன் Restaurant ஒன்றில் சாப்பிடுவோம் என்று சாப்பிட போனால் கூட கூடுதலான எண்ணையும் மசாலாவையும் ருசிக்கு அஜினாமோட்டோடையும் போட்டு வாய்க்கு ருசி ஆனால் சுகாதாரம் Zero வான சாப்பாடு சாப்பிட்டு வருகின்றோம் இங்கு அதிகமான ஹோட்டல்களில் இந்த தரம் குறைந்த எண்ணெய் வகைகளையே பயன்படுத்துகின்றது. Fast Food Center களும் இதே பாணியை தான் கையாளுகின்றன.

தான் சமைத்தது சாப்பிடுவோம் என்று சாப்பிடும் நபர்களுக்கும் இதே பிரச்சினை வர காரணமும் அதே தரம் குறைந்த எண்ணெய் வகைகளும் மற்றும் ஒரு நேரம் சமைத்த உணவை 2-3 நாட்களுக்கு குளிரூட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடும் பழக்க வழக்கமே சுகாதாரம் கெடுவதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னுமொரு பிரச்சினை நம் அதிகம் பேரின் பழக்கம் காலை ஆகாரம் குறிப்பிட்ட வேளையில் சாப்பிடாமை அது பிரச்சினைக்கு Gastric / Acidity க்கு வழிவகுத்து அதன் விளைவும் மிகவும் ஆபத்தானது.

மேற்சொன்ன சாப்பாட்டை தொடர்ந்து உண்ணும் போது தன்னை அறியாமலே உடம்பில் கெட்ட கொலஸ்ரோல் (LDL) அளவு கூடுகின்றது அதன் விளைவு இரத்த அழுத்தம் கூடுகிறது, மற்றும் கூடவே குருதியில் குளுகோஸின் அளவும் கூடுகிறது, தான் ஒரு நோயாளியாக மாறுகின்றான். வெகுசிலர் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது வேலையில் கவனத்தை செலுத்தி தான் உடம்பில் அசாதாரணத்தை உணர்ந்து கொண்டால் சாதாரண “பெனடோலை” போட்டுக்கொண்டு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். நாளடைவில் இது விஸ்வரூபம் எடுத்து பெரிய விளைவை ஏற்படுத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு இருக்கின்றன, இந்த வருடம் (2018) கூட அதிகளவான உயிர் பலி (மாரடைப்பு) சம்பவங்கள் நடந்ததை நாம் அறிந்திருப்போம்.

இருந்தாலும் இங்கு வாழ்வதாயின் இதெயெல்லாம் கடந்து தான் வாழ வேண்டும் விட்டு ஓட முடியாது, அதற்காக முடிந்த அளவு எண்ணெய் சாப்பாடுகளை குறைத்து, கொஞ்சம் உடற்பயிற்சிலும் கவனம் செலுத்த வேண்டும் அன்றாடம் குறைந்த பட்சம் ஒரு அரை மணித்தியாலம் நடந்தால் கூட போதுமானது. 

நண்பர்களே! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று ஒரு பழமொழி இருக்கின்றது, அதே போல் நமது உடம்பு சுகாதாரமாக இருந்தால் தான் நாம் எதையும் செய்ய முடியும் அதுமட்டுமல்லாது உடம்பு ஒரு அமானிதம் அதை பேணுவது நம் தார்மீக பொறுப்பு.

ஆகவே, முடிந்த அளவு நமது உணவுகளில் சுகாதாரத்தை பேணி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம் கண் முன் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை கண்டுதான், இந்த தகவலைகளை எல்லோருக்கும் எத்திவைக்க வேண்டும் என்ற அவாவுடன் இதை எழுதினேன். அதிகம் பகிர்ந்து ஆரோக்கியம் காப்போம்.

எல்லாரும் கடைப்பிடித்து ஆரோக்கியத்துடன் நம் தாயகம் திரும்போவோம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe