வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பெண்களின் பிரிவுகளுக்கு பெண்களே பணியாளர்களாக நியமிப்பதற்கு நகரபிதா நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் உள்ள சில புடைவையகங்கள் மற்றும் பான்சி கடைகளில் வாடிக்கையாளராக செல்லும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அதனூடாக சிலர் மேற் கொள்ளும் சமூக சீரழிவுகளைத் தடுக்கவே நகர பிதா இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள சில புடைவையகங்கள் மற்றும் பான்சி கடைகளில் வாடிக்கையாளராக செல்லும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அதனூடாக சிலர் மேற் கொள்ளும் சமூக சீரழிவுகளைத் தடுக்கவே நகர பிதா இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
வவுனியா நகரசபையில் கடந்த சில மாதங்களிற்கு முன் நகரசபையின் பெண் உறுப்பினர் ஒருவரால் இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்ட போதிலும் சரியான முறையில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை வவுனியா வர்த்தக சங்கத்திடம் வழங்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தாமும் நகரசபை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எனினும் தமது நிர்வாக குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டே இறுதி தீர்மானத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் கலாச்சார சீர்கேடுகளுக்கும் சமூக நல்லினக்கத்துக்கும் பாதிப்பு வரும் செயற்பாடுகளுக்கு பெரும்பாலும் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை எனவே இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலும் வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் எனவும் ஒரு சில வர்த்தக பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகர சபையின் இத் தீர்மானத்தினை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.