Ads Area

சுனாமியின் போது மர்ஹும் அமைச்சர் அன்வர் இஸ்மாயில் செய்த உதவிகளை நினைவு கூற வேண்டும்.

முஸ்தபா முபாறக்
26.12.2018

26.12.2004 இலங்கையின் வரலாற்றில் அன்று ஜனாதிபதி இருந்த கெளரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க வின் ஆட்சிக்காலத்தில் யுத்த சூழ் நிலையுடன் காணப்பட்ட இலங்கை திரு நாட்டில் பாரிய ஒரு அனர்த்தமான T - SUNAMI சுனாமி பேரலை குறிப்பாக கரையோர பிரதேசமான வடக்கு, கிழக்கை குறி வைத்தது.

சுனாமி ஏற்படுத்திய பாதிப்புக்கள்..!!

# பல்லாயிர கணக்கான உயிர்கள், உடைமைகள் பாதிக்கப்பட்டது.
# மதத் தளங்கள் பாதிப்படைந்தது.
# அரச திணைக்களங்கள், தனியார் துறை நிறுவனங்கள் பாதிப்படைந்தது.
# மீனவர்களின் தொழில் துறைகள் செயலிழந்தது.
# பெரும்பான்மையான சிறுவர், சிறுமிகளின் உயிர்கள் பரிக்கப்பட்டது.
# கரையோர பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் மற்றும் இருப்பிடம் கேள்வி குறியானது.
# தற்காலிக இடை தாங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டது.
# மருத்துவம், சுகாதார சூற்று சூழல் பாதிப்படைந்தது.
# சுனாமி பாதிக்கப்பட்ட பாடசாலை, வைத்தியசாலை, மத தளங்கள், அரச, தனியார் திணைக்களத்துக்கான புதிய நிர்மாணத்துக்கான இடம்களை இனங்கண்டு கொள்ளுவதற்கான சீக்கல் தோன்றியது.
# பாடசாலை மாணவர்களுடைய கல்வி துறை சில காலம் பாதிப்படைந்தது.
# உலர் உணவு தேவைப்பாடு உணரப்பட்டது.
# மரணித்தவர்களுடைய உடல்களை நல்லாடக்கம் செய்வதற்கான உதவிகள், இடங்கள் தேவைப்பட்டது.
# மரணித்தவர்கள் யார் எந்த இனம் என கண்டு கொள்வதில் சீக்கல் ஏற்பட்டது.

"சுனாமிக்கு பின்னர் இலங்கையின் ஏற்பட்ட அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார மாற்றங்கள்"

> அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் (INGO) வருகையும், வெளி நாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றது.
> சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சுத்தம் செய்வதற்கு இன, மத, மொழி வேறுபாடு மறந்து மனிதாபிமானம் பணிக்காக ஒற்றுமைப் பட்டாமை.
> இலங்கையின் நடைமுறையில் இருந்த யுத்த செயற்பாடுகள் தற்காலிகமாக தடைப்பட்டது.
> நிலப்பாற்றக்குறை ஏற்பட்டதுடன் காணிகளுக்கான முன்னூரிமை மேல் ஒங்கியது.
> கல்வி துறை, பாடசாலைகள் அபிவிருத்தி அடைந்தது.
> 2005 ம் ஆண்டு இலங்கையில் மஹிந்த சிந்தனையில் புதிய ஆட்சி மாற்றம் தோன்றியது.
> விவசாய நிலங்கள் மாதிரி கிராமம், தொடர் மற்றும் தனியான வீட்டுத்திட்டம் தோற்றம் பெற்றது.
> இலங்கையில் பல் வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டது விஷேடமாக வீதி அபிவிருத்தி.
> மஹிந்தவின் ஆட்சியின் வெற்றியாக 30 வருடங்களாக இலங்கையில் காணப்பட்ட யுத்தம் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது (18 மே 2009) நாடு சுதந்திர காற்றை முகர்ந்தது.
> 1987 ம் ஆண்டு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம் மஹிந்த வின் ஆட்சியில் தனி மாகாணமாக 2008 ம் ஆண்டு நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக பிரிக்கப்பட்டது.
> மக்களின் வீடுகள், தொழித்துறைகள், நாகரிகம் பெற்றது.
> மாணவர்களின் முழு கவனமும் கல்வியின் பக்கம் திரும்பியது.
> தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்பத்தின் தேவை உணரப்பட்டது.
> சனத்தொகை அதிகரிப்பு, சிறுவர், பெண் பாலியல் வன்முறை.
> கலாச்சார சீர் இன்மை.
> போதை வஸ்து பாவனை அதிகரிப்பு.
> கல்வி துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்ப கற்கை நெறி பாடசாலை பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
> மீனவர்களின் பல் தேவை கட்டிடம், மீனவ சங்கங்கள் அபிவிருத்தி அடைந்தது.
> நவீன சூற்றுலா விடுதிகள், நவீன உணவு (Fast Food) அறிமுகம்.
> இலங்கையின் சூற்றுலா துறை அபிவிருத்தி அடைந்தது.
> தொழில் வாய்ப்புக்கள்.
> சமூக வலைத்தளம்கள் எழுச்சி பெற்றது (Facebook, Whats App, Skype, IMO, Nimbuss, Google +, மற்றும் Google Map...)
> தலை நகரில் உள்ள வங்கிகள், உயர் கல்வி நிறுவனங்கள், நவீன உபகரணங்கள் (Commercial Bank, Cargills Food City etc..!!)
> இலங்கையின் அமைச்சரவையில் புதிதான அமைச்சாக - அனர்த்த முகாமைத்துவம், இடர் முகாமைத்துவ அமைச்சு அறிமுகம்.
> அனர்த்த முகாமைத்துவம், இடர் முகாமைத்துவ தொடர்பான விழிப்புணர்வு, செயலமர்வுகள்.
> சுனாமி எச்சரிக்கை மையம், கோபுரம்.
> ஊடகத்துறையின் அபரித வளர்ச்சி.

மேலும் பல...!!

இன்று சுனாமி அனர்த்ததினை நினைவுகூறும் நாம் சம்மாந்துறை சேர்ந்த மறைந்த மா மனிதர் மர்ஹும் பிரதி அமைச்சர் கெளரவ அன்வர் இஸ்மாயில் (சட்டத்தரணி) 26.12.2004 ம் ஆண்டு சுனாமியின் போது செய்த உதவியையும், எம் சமூகத்துக்காக செய்த தியாகங்களையும், சம்மாந்துறை மக்களையும் அவர்களின் சகோதரத்துவ உணர்வினையும் இவ்விடத்தில் நாம் நினைவு நினைவு கூற வேண்டும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe