Ads Area

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவ கருத்தரங்கு.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு - 2018 கல்முனை கிறிஸ்த இல்லத்தில் அதன் தலைவர் தானிஸ் றஹ்மதுல்லாஹ் தலைமையில் அண்மையில் (22) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் ,யுவதிகளின் திறமைகளை இனம்கண்டு அவர்களுக்கான களத்தை உருவாக்குவது இவ் அமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

இங்கு தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கினை "வுழூ ஸ்கை கெம்பஸ்" முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ஜெ. ராகுலன் நடாத்தி வைத்தார். அத்துடன் இப்பயிற்சி தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவ வான்மையை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் முஹம்மட் நிஸாம் மாயில், தொழிலதிபர், அரசியல் விமர்சகர் எம்.எச்.எம்.இப்றாஹீம், ஆலோசகர் சமூக சேவகர் எஸ்.எல்.ஏ.நிஸார், பிரபல எழுத்தாளரும், நடிகையுமான நவயுகா ராஜ்குமார், "வுழூ ஸ்கை கெம்பஸ்" அலுவலக முகாமையாளர் வி. ரகுராஜன், சிரேஷ்ட ஊடகவியலாளர், ஆசிரியர் அமைப்பின் ஆலோசகர் எஸ்.அஷ்ரப்கான் மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தபா முபாறக் ஆகியோர் உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை ,மடடக்களப்பு,திரு கோணமலை மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் நினைவுக் கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கலந்த இளைஞர் ,யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe