மேகாலயாவில் கடந்த 12 நாட்களாகச் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க உதவாமல், கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
மேகாலயாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜைண்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்துக்குள் அருகில் இருந்த லைத்தின் ஆற்றுநீர் உள்ளே புகுந்தது. இதில் உடனடியாக 5 பேர் தப்பினார்கள். ஆனால், 13 பேர் நிலக்கரிச் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 13-ம் தேதியில் இருந்து இவர்களை மீட்க பேரிடர் மீட்புப்படையினர் கடந்த 12 நாட்களாக முயன்று வருகின்றனர். ஆனால் முடியவில்லை.
மேகாலயா மாநிலத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோதிலும், சட்டவிரோதமாக நிலத்தின் அடியில் கிணறுபோன்று குழிஅமைத்து சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கின்றனர். அதுபோல் எடுத்தபோதுதான் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர் கூறுகையில், ''மேகாலயாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்க பேரிடம் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். அவர்களை மீட்பதற்கு உயர் அழுத்தம் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், அதை அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றாமல், அசாமில் போகிபீல் பாலத் திறப்புவிழாவில் புகைப்படத்துக்கும், கேமராவுக்கும் பிரதமர் மோடி போஸ் கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு முறையான உதவிகளை வழங்கி 15 தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்.
இதற்கிடையே மேகாலயா உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கிழக்கு ஜெயன்தியா மலைமாவட்டத்தில்தான் இந்தச் சுரங்கம் இருக்கிறது, ஆனால் மீட்புப்பணிக்கு போதுமான அளவு ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.