Ads Area

தனது 5 வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கயிருக்கும் ஜனாதிபதி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விட்டு இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியுள்ளன.

விடுமுறையில் தற்போது குடும்பத்தினருடன் தாய்லாந்து சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேன அங்கு அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்ந்ததாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கடுமையான கவலையை அவர் வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கௌரவமான முறையில் ஓய்வுபெறுமுகமாக அவரது மக்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவரது ஆலோசகர்களில் ஒருவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe