எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது மகிந்தவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
களனி பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் ஜனவரியின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மகிந்தவிற்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.