தனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு உதவிகளையும், சமூக சேவைகளையும் நீண்டகாலமாக செய்து வரும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடமை புரியும் YBM அஸ்மி அவர்களினால் சம்மாந்துறை செந்நெல் கிராமம் - 02 பகுதியில் நீண்ட காலமாக விஷ்தரிக்கப்படாதிருந்த மதீனா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு தொகை நிதியினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசலுக்கு நேரடியாகச் சென்று பள்ளிவாசலின் நிலையினை பார்வையிட்டு விஷ்தரிப்புக்குத் தேவையான நிதியினை பள்ளிவாசல் தலைவர் அப்துல் ஹமீட் அவர்களிடம் கையளித்தார்.
மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசலுக்கு அதிகமானவர்கள் தொழுகைக்காக வருவதாகவும் இதனால் பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் நோன்பு காலங்களில் பெண்களும் தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவதனால் மேலும் சிரமங்களை சந்திப்பதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் அஸ்மி யாசீன் அவர்களிடம் தெரிவித்ததனை அடுத்து பள்ளிவாசலில் விஷ்தரிப்புப் பணிகளுக்காக மேற்படி நிதியினை அவர் கையளித்திருந்தார்.
மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசலுக்கு அதிகமானவர்கள் தொழுகைக்காக வருவதாகவும் இதனால் பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் நோன்பு காலங்களில் பெண்களும் தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவதனால் மேலும் சிரமங்களை சந்திப்பதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் அஸ்மி யாசீன் அவர்களிடம் தெரிவித்ததனை அடுத்து பள்ளிவாசலில் விஷ்தரிப்புப் பணிகளுக்காக மேற்படி நிதியினை அவர் கையளித்திருந்தார்.
பள்ளிவாசல் தலைவர், நிர்வாகிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு அஸ்மி அவர்களின் உதவிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.