கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று 2019.01.12 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது,
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பாரியார் ஹாஜியானி ஸொஹறா மன்சூர் அவர்களை முன்னிலைப்படுத்தி கல்முனை மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக தொழில்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான் நூல் ஆய்வுரை செய்து உரை நிகழ்த்துகையில்,
மர்ஹும் மன்சூர் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அன்னார் அமைச்சராக பதவி வகித்தபோது அன்னார் தனக்கு தனிப்பட்ட செயலாளராக வைக்கப்பட்டிருந்தவர்கள் சாதாண பழைய துவிச்சக்கர வண்டியில் சென்று கடமையாற்றியதையும் தற்போதய அமைச்சர்களின் அந்நியொன்னியங்கள் எவ்வாறு சொகுசு கார்களில் பயணிக்கிறார்கள் என்பதையும் உதாரணம் காட்டிப் பேசியதுடன் தற்போதய அரசியல் முறைமைகளையும் அரசியல்வாதிகளின் நிலைகளையும் எடுத்துக்கூறி இவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே to late எனத் தைரியமாக சபையில் முன்வைத்து பேசினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நூல் அறிமுகவுரை செய்து உரை நிகழ்த்துகையில், மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் இலட்சியம் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சியும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரதப்பாதை விஸ்த்தரிப்பும் என்பதை எடுத்துக்கூறி அன்னாரின் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் முன் வைத்தார்.
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உரை நிகழ்த்துகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவரது அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது என்றார்.
இந்நிகழ்வில் குஞ்சித்தம்பி ஏகாம்பரம், டாக்டர் எஸ். நளீம்டீன், சட்டத்தரணி மர்யம் நளீம்டீன், நூலாசிரியர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் பேத்தி சைனப் நளீம்டீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை மேயர் ரக்கீப் அபூபக்கர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இப்புத்தகத்தின் விலை 1250 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.