Ads Area

படையினர் வசமிருந்த காணி கிழக்கு ஆளுநரால் விடுவிப்பு.

சகாதேவராஜா

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல.எ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (18) வெள்ளிக்கிழமை காலை அம்பாறைக்கச்சேரிக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க வரவேற்றதைத் தொடர்ந்து கச்சேரியின் எ.ஜ.விக்ரம அரங்கில் சந்திப்பும் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது படையினர் வசமிருந்த காணி விடுவிப்புச் செய்யப்பட்ட பத்திரங்கள் கையளிக்கப்பட்டதோடு, அவை அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநருடன் அவரது செயலாளர் அசங்கஅபேவர்த்தனவும் சமுகமளித்திருந்தார். அதில் அரசஅதிபர் பண்டாரநாயக்க படை உயர் அதிகாரி சகிதம் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe