Ads Area

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடம் இருந்து கற்றுக்கொள்வோம் "எனும் தொனிப்பொருளிலான மாபெரும் ஊர்வலம்.


Abdul Rasool· 
சம்மாந்துறை KM/ST/அல்-மதீனா வித்தியாலய  மாணவர்களினால் 2019.01.21 தொடக்கம் 2019.01.25ம் திகதி வரையான தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு "போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடம் இருந்து கற்றுக்கொள்வோம் "எனும் தொனிப்பொருளிலான மாபெரும் ஊர்வலம் 2019.01.24ம் திகதி இடம்பெற்றது.

இதில் பாடசாலையின் PSI இணைப்பாளர் KM.செளதுன் நஜ்ஜாஸ் மற்றும் சுகாதார பரிசோதகர் MIM ஹனீபா ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் பாடசா லை அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர் ஊர்வலம் வலயக்கல்வி அலுவலகம் சென்றபோது வலயக் கல்விப்பணிப்பாளர் MS.செளதுல் நஜீம் சேர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கப்பட்டது. 

மேலும் 2019.01.22ம் திகதி போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் எனும் தலைப்பில் பெற்றோர்கள் மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் கரு த்தரங்கு எமது பாடசாலையில் இடம்பெற்றது இதில் சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான Dr. ALM.பஸ்மினா (CMO) , Dr.TL.றுமைஸா (CMO) ஆகியோர்களினால் விளக்கமளிக்க ப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe