Ads Area

நற்பிட்டிமுனையில் அறிஞர் சித்திலெப்பை ஞாபகார்த்த விருது வழங்கல் விழா

நற்பிட்டிமுனை அல்-அக் ஷா மகா வித்தியாலயத்தின் அதிபர் கலை இலக்கியவாதி எம்.எல்.ஏ. கையூம் தலைமையில் இன்று (24) அறிஞர் சித்திலெப்பை ஞாபகார்த்த விருது வழங்கல் விழா இடம் பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் கலை-இலக்கிய ஆளுமைகளுக்கு விருதுகளும், பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி கண்காணிப்பு அதிகாரியான திரு. முஹம்மட் ஹனீபா அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிரேஷ்ட ஊடாகவியலாளர் சீ.பீ.எம்.சியாம், அதிபர் எம்.எல்.ஏ. கையூம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமூர்த்தி கண்காணிப்பு அதிகாரியும், ஊடகவியலாளரும், இலக்கியவாதியுமான திரு. முஹம்மட் ஹனீபா அவர்கள் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe