வவுனியாவைச் சேரந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையைச் சுற்றி துவிச்சக்கரவண்டியில் வரும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த சாதனைப்பயணம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளன.