Ads Area

இலங்கையைச் சுற்றி துவிச்சக்கரவண்டியில் 2125 கிலோ மீற்றர் தூர பயணம் மேற்கொள்ளும் பிரதாபன்.

வவுனியாவைச் சேரந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையைச் சுற்றி துவிச்சக்கரவண்டியில் வரும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பமாகவுள்ளதுடன், 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன், மார்ச் மாதம் 13ஆம் திகதி யாழ். பல்கலைக்கழத்தில் 11 மணிக்கு நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனைப்பயணம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன், வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe