Ads Area

தேய்காய் துருவும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தும் சம்மாந்துறை வில்லேச் விஞ்ஞானி (வீடியோ)

தகவல் - டொக்டர் நியாஸ் அஹமட்.

சம்மாந்துறையைச் சேர்ந்த தையல் இயந்திர திருத்துனரும் பல்துறைத் தொழில் நுட்பவியலாளருமான கவிஞர் அபூ அப்கான் (தாஹிர்) என்பவர் புதிய ஆக்கபூர்வமான இயந்திரம் ஒன்றை உருவாக்கி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார்.

இவர் கழிக்கப்பட்ட ஒரு தையல் இயந்திரத்தின் சிலபாகங்களைக் கொண்டு ஒரு தேங்காய் துருவும் இயந்திரத்தைத்தை தயாரித்திருக்கின்றார்.

இவ்வியந்திரம் மின்சாரத்தின் மூலம் இயங்குகிறது. அதே நேரம் மின்சார வசதியற்ற இடங்களில் தையல் இயந்திரத்தைக் காலால் மிதித்து இயக்குவது போன்று இயக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இவ்வியந்திரத்தினால் ஒரு நிமிடத்திற்குள் ஒரு தேங்காயைத் துருவி முடிக்க முடியும்.

மேலும் இதன் தேங்காய் துருவும் பகுதியைக் கழற்றிவிட்டு சாணைக் கல்லை மாற்றி கத்தி போன்ற ஆயுதங்களைத் தீட்டுவதற்கும் பயன் படுத்த முடியும்.
கவிஞர் அபூஅப்கான் அவர்களுக்கு எமது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe