Ads Area

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை உட்பட 102 பேர் விண்ணப்பம்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இந்த நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற உள்ளது.

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றில் இருந்து 79 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த 79 விண்ணப்பங்களில் இருவர் அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe