இன்று (19) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பெருந்திரளான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டு நீதிவேண்டி ஜெனீவாவை நோக்கி முளக்கமிட்டுள்ளனர்.
மட்டக்களப்பபு, கல்லடி பாலம் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி காந்திப்பூங்காவரை சென்றிருந்தது.
இதேவேளை, இவ்வார்ப்பட்டம் காரணமாக கிழக்குமாகாணத்தில் பல பிரதேசங்களில் வழமைநிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன் வாகனப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேபோன்றதொரு பேரணி வடக்கிலும் கடந்த 16ம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.