Ads Area

ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநொச்சி முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பல மாணவர்கள் (சுமார் 18 மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது) காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அந்தப் பாடசாலையில் 5ம் தரத்தில் கல்வி பயிலும் சின்னஞ் சிறு மாணவ-மாணவிகளையே குறித்த ஆசிரியர் தாக்கியுள்ளார். கைகளாலும் , பிரம்பினாலும்  கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தற்போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது நடவடிக்கை மோசமாக காணப்பட்டதனால் அவரை இடம் மாற்றம் செய்யுமாறு பல தடவை கேட்டுக் கொண்டதாகவும் குறித்த அப்பாடசாலையின் ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தகவலுக்கு நன்றி - றுமைஸ் மற்றும் கல்முனை டுடே.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe