Ads Area

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அவர்களினால் பொத்துவிலில் நிர்மானிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்ட வேலைகள் நிறைவு.

அஹமட் சாஜித் -

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை, நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் முயற்சியின் பலனாக பொத்துவில் பிரதேசத்தில் வீடுகள் இல்லாமல் கஸ்டங்களை எதிர்நோக்கும் ஏழைக்குடும்பங்கள், திருமணங்கள் செய்வதற்கு வீடுவாசல் இல்லாமல் கஸ்டப்படும் பெண்களின் தேவைகளையும், குறைகளையும் அறிந்து, துபாய் நாட்டு அரசாங்கத்தின் தனவந்தர்களின் உதவியின் மூலம் கடந்த வருடம் 50 வீடுகள், பள்ளிவாசல், பாடசாலை, சிறிய வைத்தியசாலை போன்றன உள்ளடங்கிய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்நடும் நிகழ்வு கடந்தவருடம் பொத்துவில் சிரியா பகுதியில் அமைச்சரின் வருகையோடு இடம்பெற்றது.

தற்போது அதன் கட்டுமான பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்து அழகான முறையில் 50 வீடுகள், பள்ளிவாசல் , மருந்தகம், பாடசாலை போன்றன காட்சியளிக்கின்றன. வீடுகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடத்தில் அமைச்சரினால் கையளிக்கும் நிகழ்வு வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe