Ads Area

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பும்.

காரைதீவு நிருபர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடாத்தும் ‘கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது விழா’ ஞாயிற்றுக்கிழமை (2019-03-31) மாலை கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் இகைத்தொழில்,வர்த்தகம்,நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றஇகூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சிதிறன் அபிவிருத்தி அமைச்சருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவப்பெரும ஸ்ரீயானி விஜய விக்கிரம அமீர்அலி ஏ.எல்.எம்.நஸீர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருடன் பிரதேசசெயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் ஊடகவிழயலாளர் போரத்தின் தலைவர் அனந்த பாலகிட்ணர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் சிங்கள் தொழிற்சங்கவாதிகளாளும் கலநதுகொண்டு கௌரவித்தனர்.

இந்த விருது விழாவில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனதின் உறுப்பினர்கள் 18 பேரும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் ,முஸ்லிம்,சிங்கள சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்கள் 30பேரும்.சமூக சேவைக்காக 4 பேருமாக 52 பேர் பொன்னாடை போர்த்திமாலை.பதக்கம் என்பன அணிவித்து விருதும்.சாண்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போரத்தின் செயலாளர் எ.ஜே.எம்.ஹனிபா நன்றியுரையாற்றினார்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe