Ads Area

இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

இலங்கையில் தேவாலயங்களிலும், விடுதிகளிலும் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தண்ணீர் தீவு என்று அழைக்கப்படக்கூடிய இலங்கை கண்ணீரால் நிரம்பி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்


தண்ணீர் தீவு என்று அழைக்கப்படக்கூடிய இலங்கை கண்ணீரால் நிரம்பி இருக்கிறது அனைவரது உடலிலும் ஓடுவது ஒரே நிறமான இரத்தம் தான். குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆகவே தாக்குதலில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அஞ்சலியில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 


மதம் வாரியாக அனைவரும் பிரிந்து வாழ்கிறோம், இருப்பினும் ஒற்றுமை என்பது வெறும் பேச்சில் மட்டும் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe