Ads Area

தாக்குதலில் இறந்த குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக எண்ணி அழுகின்றார்கள் முஸ்லிம்கள்.

அடிப்படை வாதிகளின் பேரழிவுத் தாக்குதல்களால் நாம் மட்டுமல்ல என்பதையும் சமாதான சகவாழ்வை விரும்பும் இலங்கை முஸ்லிம் மக்கள் முழுமையும் எங்களைப் போன்று பாதிக்கபட்டவர்களே என்பதை உணர்வது எமது மனிதக் கடமையாகும். 

தாக்குதலில் இறந்த நம் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக எண்ணி அழுகிற முஸ்லிம் சகோதர சகோதரிகளோடு சமூக வலைத் தழங்களில் பேசி நானும் கலங்கியிருக்கிறேன்.

இந்த துயர்மிகு தருணத்தில் மத அடிபடைவாத நச்சுப்பாம்புகளோடு போராடும் முஸ்லிம் மக்களும் நாமும் ஒருவருக்கொருவர் ஆதரவாகித் துணை நிற்க்க வேண்டியது கடமையாகும். அதன்மூலம் மட்டுமே இல்ழ்ங்கைத் தீவின் மக்கள் யாவரும் இன்றைய நாட்களின் பெருந்துயரையும் கடந்திட முடியும்.

இவ்வாறு எழுத்தாளரும், நடிகருமான ஜெயபாலன் அவர்கள் தனது முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe