பலதரப்பட்ட சூழலில் இருந்து வரும் குழந்தைகளை வழிப்படுத்தி அவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆசிரியருக்கு காணப்படுகின்றது.
சிறுவர்களின் வளர்ச்சியில் முதற்கட்ட கல்வியில் செல்வாக்குச் செலுத்துபவராக முன்பள்ளி ஆசிரியர் விளங்குகின்றார். அவர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்பொழுது கிழக்கு மாகாணத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற 3000.00 ரூபாய் கொடுப்பனவை 4000.00 ரூபாயாக உயர்த்தியுள்ளது அதற்காக கிழக்கு மாகாண ஆளுநனருக்கு நன்றி கூற வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர்களின் தங்களின் கல்வித்தகைமை மற்றும் தொழில்வாண்மை என்பனவற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.