Ads Area

காட்டுமிராண்டித் தன தாக்குதலில் பலியான உறவுகளுக்காக சோகத்தில் மூழ்கியுள்ள சம்மாந்துறை.

நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமாக தீவிரவாத தாக்குதல்களில் பலியான உறவுகளின் துயரங்களில் பங்குகொள்ளும் முகமாக சம்மாந்துறை முழுவதும் இன்று சோகத்தால் மூழ்கியது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களால் பலியான 300 க்கும் மேற்பட்ட சகோதரங்களின் துயரில் பங்குகொள்ளும் முகமாக இன்று சம்மாந்துறை முழுவதும் துக்க அனுஷ்டிக்கப்படுகின்றது.

சம்மாந்துறையில் உள்ள எந்தவித வர்த்தக நிலையங்களும், அலுவலகங்களும் இன்று இயங்கவில்லை அத்தோடு தாக்குதலில் பாதிப்படைந்த மக்களுக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகளிலும் சம்மாந்துறை மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மிக இரக்கமற்ற காட்டுமிராண்டித்தன இத் தாக்குதலை சம்மாந்துறை மக்கள் கண்டிப்பதோடு கூடிய விரைவில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எவ் இனத்தைச் சார்ந்தோராக இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சமின்றி தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் சம்மாந்துறை மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe