சர்வதேச ஆதரவைப் பெற்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விஷேட அறிக்கை ஒன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார்.
1989 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவவில்லை. இனவாத பிரச்சினை காரணமாக அப்போதைய பயங்கரவாதம் நீண்டநாள் நீடித்தது. தமிழ் சிங்கள புத்தாண்டில் எமது பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்று அபிவிருத்தி அடைந்து வரும் நேரத்தில் இந்த பயங்கரவாதம் செயல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்த பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை நிறைவேற்றியுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவின் 3-4 கீழ் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்திலும் எதிர் தரப்பினர் கூச்சலிட்டு இடையூறு செய்தனர். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூச்சல் இடுபவர்களை பயங்கரவாதிகளாகவே காண்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இதே போன்று ஜப்பான் பிரதமர் அவுஸ்ரேலியா மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டனர். தற்பொழுது எமக்கு சர்வதேச ரீதியில் முழுமையான உதவி கிட்டியுள்ளது.
நாம் இதனை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பயன்படுத்துவோம் என்றும் பிரதமர் கூறினார். இந்த பயங்கரவாதத்தில் திட்டமிட்ட நபர்கள் இருக்கின்றனர் .இவர்களை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்து வருகின்றனர். அவசரகால சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்வதற்காக அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொலிஸாருக்கும் இந்த அதிகாரம் உண்டு. இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்களின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மேற்கொள்வதாகும். நாம் தற்பொழுது சுற்றுலாத் துறையை பாதுகாத்து பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

