நோன்பு காலத்திலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம், இறுதியாக ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளோம்.....!
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையைத் தீர்த்து வைப்பதாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் வாக்குறுதியளித்து பல மாதங்கள் கடந்துவிட்டபோதும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் விரைவில் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும், நோன்பு காலத்திலும் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையொன்றினைப் பெற்றுக்கொள்ளும் வரை எமது போராட்டங்கள் தொடரும். இந்தப் போராட்டத்தில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தகசங்கத்தின் பிரநிகதிநிதிகள், உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயேச்சைக் குழுவின் உறுப்பினர்கள் என பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.