Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் ”நாட்டுக்காக ஒன்றினைவோம்” விழிப்புணர்வு நிகழ்வு.

ஜனாதிபதியின் நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபையினால் விழிப்புணர்வு நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

ஜனாதிபதியின் நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டத்தின் கழிவுகளை உக்கக்கூடிய, உக்காத கழிவுகளை தரம் பிரித்தறியும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை பிரதேசத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீதியாக சென்று மக்களுக்கு கழிவுகளை உக்கும் கூடிய  கழிவுகள், உக்காத கழிவுகள் தரம் பிரிப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரமும் வழங்கப்பட்டது.


இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.யோகனந்தன், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe