Ads Area

நான் ஒரு இந்துவாக இருந்தாலும் நானும் ரமலான் நோன்பு நோற்றுக் கொள்கிறேன் - நடிகை ப்ரியா ஆனந்த்.

சமீபத்தில் வெளியான  'எல்கேஜி' படத்தில் நடித்துமுடித்த திருப்தியில் இருப்பவர், ப்ரியா ஆனந்த். 'எதிர்நீச்சல், 'வணக்கம் சென்னை' போன்ற படங்களில் நடித்தவரான ப்ரியா ஆனந்த், இவர் தான் ஒரு இந்துப் பெண்ணாக இருந்தாலும் முஸ்லிம்கள் நோற்கும் புனித ரமலான் நோன்பை நோற்று வருவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

''அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு  எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது'' என குறிப்பிட்டார்.

''இந்த வருடம் ரம்ஜான் நோம்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சிசெய்துவருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்துவருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களில் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான்  இந்த முயற்சி.' என்று அவர் மேலும்  அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe