விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. எனினும் இந்த ISIS தீவிரவாத தாக்குதலை முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கின்றனர் என பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் சரியான நேரத்தில் தீவிரவாதிகள் தொடர்பில் தகவல்களை வழங்கியமையினாலேயே நடைபெறவிருந்த மேலும் பல தாக்குதல்களை தடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.