Ads Area

அமைச்சர் ரிஷாட் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை - முசலி பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் அதனை முசலி பிரதேச சபை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி முசலி பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியானால் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின் போதே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆதரவளித்ததனால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe