Ads Area

சிலோன் மீடியா போரம் ஏற்பாட்டில் "மண்வாசனை" நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல்.

சிலோன் மீடியா போரம் ஏற்பாட்டில் "மண்வாசனை" நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் போரத்தின் தலைவர் றியாத்ஏ.மஜீத் தலைமையில் மத்திய முகாம் மஹ்ரூப் தோட்டத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களாக நீண்ட காலமாக பணியாற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றியாத் ஏ.மஜீத், சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான ஏ.எஸ்.எம்.முஜாஹித், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினரும் ஊடகவியலாளருமான எம்.எம்.ஜபீர் ஆகியோர் நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் எம்.வி.நவாஸ் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் எம்.வி.நவாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் பிரிவு உதவிப் பணிப்பாளர் சீ.வி.எம்.சியாம், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம் சஜா, கனி இன்ஜினியரிங் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிசாத் உள்ளிட்ட போரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe