கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் பகுதி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் பகுதி இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று மதியம் 12 மணி முதல் பயணி ஒருவர், இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

