Ads Area

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் கண் சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்!

(காரைதீவு நிருபர் சகா)

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக ஸ்தம்பிதமடைந்திருந்த கண் சத்திரசிகிச்சைகள் யாவும்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

கண் சத்திரசிகிச்சைக்கூடம் கடந்த 3 மாதங்களாக நவீனமயமாகப் புனரமைக்கப்பட்டுவந்ததே ஸ்தம்பிதநிலைக்கான காரணமாகும் என்றும் கூறினார். இனிமேல் கண்வில்லை பொருத்துதல் தொடக்கம் சகல கண்சத்திரசிக்சைகளும் கிரமமாக நடைபெறும்.

கண்வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் எஸ்.பிரேம் ஆனந்தின் வருகையின் பின்னர் சத்திரசிகிச்சைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. கண் நோயாளர்களின் வருகையும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இதேவேளை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர்.எஸ்.பிரேம் ஆனந்தின்; வேண்டுகோளிற்கு இணங்க வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனின் ஒருங்கிணைப்பின் பெயரில் லண்டனில் வாழும்  கண் வைத்திய நிபுணர்  திருமதி ராதா தர்மரெட்ணம் (லண்டன்) அவர்களினால் ரூபா 5 இலட்சம் பெறுமதியான மூக்குக் கண்ணாடி வில்லை மானி FOCI METER உட்பட மேலும் சில உபகரணங்களும் (EQUIPMENTS)  நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

கண் வைத்திய நிபுணர்  திருமதி ராதா தர்மரெட்ணம் (லண்டன்) அவர்களின் இந்த அன்பளிப்புப்பொதியை களுவாஞ்சிக்குடி சமூக நலன்புரி சங்கம்   நேற்று வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனிடம் வழங்கிவைத்தது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனின் வேண்டுகோளின்பேரில் லண்டனில் வாழும் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கண்வைத்திய நிபுணர் டாக்டர் ராதாதர்மரெட்ணத்தின் முயற்சியினால் இவ் வவைத்தியசாலையில் இருதடவைகள் இலவசமாக ஏழை கண்நோயாளர்களுக்கு கண்வில்லை பொருத்தும் வெண்புரை சத்திரசிக்ச்சைகள் பல இலட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe