Ads Area

திடிரென உண்ணாவிரதத்தை கைவிட்டு கிளம்பிச் சென்ற பா.உ. வியாழேந்திரன்.

திடிரென உண்ணாவிரதத்தை கைவிட்டு கிளம்பிச் சென்ற பா.உ. வியாழேந்திரன்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவுசெய்தார்.

அவர், நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன், “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் மாலை வரை மட்டும் உண்ணாவிரதமிருந்து எழுந்து சென்ற வியாழேந்திரனை நெட்டிசன்கள்,

உண்ணாவிரதமிருப்போர் எல்லோரும் தமிழ் இனத்துக்காக உண்மையாக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட திலீபன் ஆகி விட முடியாது என்றும், தமிழினத்தை தங்களது அரசியல் சுயநலன்களுக்காக பயண்படுத்தாதீர்கள் என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe