அஸ்ரப் ஏ சமத்
இலங்கை இரானுவத்தில் உள்ள முஸ்லிம் உயா் அதிகாரிகள் இணைந்து இப்தாா் நிகழ்வொன்றினை கடந்த வெள்ளிக்கிழமை வாதுவை லீசா பீச் கோட்டலில் இரானுவ பயிட்சிப் பணிப்பாளா் நாயகமும் இரானுவ முஸ்லிம் அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான மேஜா் ஜெனரல் பாங்ஸ் ஜாயா தலைமையில் நடாத்தியிருந்தனர்.
இந் நிகழ்வுக்கு இரானுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும் இரானுவப் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் காவிந்த சில்வா, விசேட அதிரப்படை தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் எம். லத்தீப், பிரிகேடியா் அசாட் இஸ்ஸடீன், மற்றும் பொலிஸ், விமானப்படை, கடற்படைகளில் உள்ள முஸ்லிம் உயா் அதிகாரிகளுடன் இரானுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
அத்துடன் இவ் வைபத்தில் இப்தாா் பற்றிய பிரதான உரையை நிகழ்த்திய மௌலவிக்கு இரானுவத் தளபதியினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.